முகப்பு
தற்போதைய செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் மகன் மோட்டார் சைக்கிள் திருட்டு!

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம். இவரது மகன் மகேஷ் ஜெகதீஷ் (21) அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயின்று வருகின்றார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:38 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் சப்-இன்ஸ்பெக்டர் மகனின் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம். இவரது மகன் மகேஷ் ஜெகதீஷ் (21) அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயின்று வருகின்றார். மாணவர் ஜெகதீஷ் கடந்த செப்.10-ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் எதிரே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →