முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட இருவர் கைது!

சிதம்பரம் அருகே உள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் (27),  கடலூர் அருகே உள்ள ரெட்டியார்பேட்டையைச் சேர்ந்த ஷகிலாவிற்கும் (23) கடந்த 4 மாதங்கள் முன்பு திருமணம் நடைபெற்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:39 PM
பகிர்:

வரதட்சணை கேட்டு மனைவியை அடுத்து துண்புறுத்தியதாக கணவர் மற்றும் கணவரின் அக்கா ஆகிய இருவரை சிதம்பரம் மகளிர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் (27),  கடலூர் அருகே உள்ள ரெட்டியார்பேட்டையைச் சேர்ந்த ஷகிலாவிற்கும் (23) கடந்த 4 மாதங்கள் முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் அய்யப்பேட்டையில் வசித்து வந்த ஷகிலாவை வரதட்சணை கேட்டு கணவர் பிரபாகரன் மற்றும், அவரது அக்கா சுதா (33) ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து துண்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷகிலா சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப் பதிந்து கணவர் பிரபாகரன் மற்றும் அவரது அக்கா சுதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →