புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்: 2 பேர் கைது
வடலூர் என்.எல்.சி. அலுவலர்கள் நகரில் ரமேஷ்(45) என்பவரின் வீட்டிலும், பஸ் நிலையத்தில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் கடையிலும் போலீஸôர் சனிக்கிழமை சோசனை நடத்தினர். அப்போது தலைவா,
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் புதுப்படங்களின் திருட்டு சி.டி.க்கள் மற்றும் டி.வி.டி.க்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வடலூர் என்.எல்.சி. அலுவலர்கள் நகரில் ரமேஷ்(45) என்பவரின் வீட்டிலும், பஸ் நிலையத்தில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் கடையிலும் போலீஸôர் சனிக்கிழமை சோசனை நடத்தினர். அப்போது தலைவா, மரியான், தேசிங்குராஜா, 555, பட்டத்துயானை உள்ளிட்ட புதிய படங்களின் சி.டி.க்கள். மற்றும் டி.வி.டி.க்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து ரமேஷ், வடலூர் ஆபத்தானபுரம் அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டன்(20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 429 சி.டி.க்கள் மற்றும் டி.வி.டிக்களையும், அவற்றை தயாரிப்பதற்காக பயன்படுத்திய 2 இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.