விவகாரத்து கோரிய மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது
சிதம்பரம் அருகே நாஞ்சலூரைச் சேர்ந்த செல்வராஜ் (48). இவருக்கும் காவனூரைச் சேர்ந்த கலைச்செல்விக்கும் (44) திருமணமாகி 17 வருடங்களகிறது. குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே
சிதம்பரத்தில் விவாகரத்து கோரிய மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே நாஞ்சலூரைச் சேர்ந்த செல்வராஜ் (48). இவருக்கும் காவனூரைச் சேர்ந்த கலைச்செல்விக்கும் (44) திருமணமாகி 17 வருடங்களகிறது. குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் பச்சையப்பன்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த மனைவி கலைச்செல்வியை, கணவர் செல்வராஜ் இருசக்கர வாகனத்தால் மோதி வழிமறித்து தான் போட்ட நகைகளை கழற்றி கொடுக்குமாறு கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மனைவி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து கணவர் செல்வராஜை கைது செய்தனர்.