முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் தொடக்கம்!

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வி.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:42 PM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்: சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் எம்ஏ (தமிழ்), எம்ஃபில் (தமிழ்), பி.ஹெச்டி (தமிழ்), எம்எஸ்சி (தாவரவியல்), எம்ஃபில் (தாவரவியல்), பிஹெச்டி (தாவரயியல்), எம்ஃபில் கணிதம், பிஹெச்டி (கணிதம்) ஆகிய பாடப்பிரிவுகளில் அனுமதி சேர்க்கை செய்ய தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. எம்ஏ., எம்எஸ்சி பாடப்பிரிவுகளுக்கு கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். எம்ஃபில், பிஹெட்சி ஆராய்ச்சி பட்ட  படிப்பிற்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப இறுதிநாள் 30-9-2013.

முழு கட்டுரையைப் படிக்க →