முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் பார்வையற்றோர் போராட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் பார்வையற்றவர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக முன்வைத்துள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

Updated On : 26 செப்டம்பர், 2013 at 2:27 PM
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் பார்வையற்றவர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக முன்வைத்துள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தாமிரவருணி பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பார்வையற்றோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.