முகப்பு
தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி பகவதியம்மன் நவராத்திரி திருவிழா: அக். 5-ல் தொடங்குகிறது.

முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்தில் எழுந்தருளுதல், காலை 8 மணிக்கு கன்னியா பூஜை, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோவில் சுற்றி பவனி வருதல் நடைபெறும்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் நவராத்திரி 10 நாள் திருவிழா அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது.

 முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்தில் எழுந்தருளுதல், காலை 8 மணிக்கு கன்னியா பூஜை, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோவில் சுற்றி பவனி வருதல் நடைபெறும்.

 திருவிழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், ஆன்மீக உரை, இன்னிசை நிகழ்ச்சிகள், சிறப்பு அன்னதானம், அம்பாள் திருக்கோவில் சுற்றி பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 10-ம் நாள் திருவிழாவான அக். 14-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு தேவியை அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அமர்வித்தல் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெறும். பிற்பகல் 12 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேவி பரிவேட்டைக்கு செல்வார்.

  பரிவேட்டை ஊர்வலத்தில் குமரி பகவதியம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் யானை, குதிரை, முத்துக்குடை, பஞ்சவாத்தியம், தேவராட்டம், தையம் ஆட்டம், பஜனை  ஆகியவை அணி வகுத்து செல்லும். ஊர்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம் வழியாக மகாதானபுரம் சந்திப்பில் உள்ள காரியக்கார மடத்தை சென்றடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

 பின்னர் நரிக்குளம் பகுதியில் அம்மன் பாணாசூரன் என்ற அரக்கனை அம்பு எய்து வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு சுருள் வைத்து வழிபடுவார்கள்.  அங்கிருந்து பல்லக்கு வாகனத்தில் அம்மன் பஞ்சலிங்கபுரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் செல்வார். அங்கு அம்மனுக்கு ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து கோவில் கிழக்கு வாசல் வழியாக கோவிலை சென்றடைவார்.

 விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் இரா.ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் தா.சோனாச்சலம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →