சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பொறியல் கல்லூரி மாணவர் சாவு
சிதம்பரம் அருகே சனிக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது மினிடோர் லாரி மோதி விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே சனிக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது மினிடோர் லாரி மோதி விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புவனகிரி அருகே உள்ள வாண்டையார்குப்பத்தைச் சேர்ந்த டி.ராஜூ (23). இவர் காட்டுமன்னார்கோயிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை தனது நண்பர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் சேத்தியாதோப்பு சென்றார். அப்போது சியாப்பாடி எனுமிடத்தில் எதிரே மீன்ஏற்றி வந்த மினிடோர் லாரி மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் டி.ராஜூ உயிரிழந்தார். மற்றொருவரான மணிகண்டன் படுகாயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.