தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன்
ஓசூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சுரேஷ்குமார் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்டான்.
ஓசூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சுரேஷ்குமார் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்டான்.
ஓசூரைச் சேர்ந்த முத்துக்குமார் தனது மனைவி செல்வி, இரண்டு மகன்களுடன் காலாண்டு விடுமுறைக்காக திருநெல்வேலியில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தார்.
இன்று காலை குடும்பத்தோடு தாமிரபரணி ஆற்றில் குளிக்க கொக்கிடகுளம் பகுதிக்கு வந்தார். அப்போது, முத்துக்குமாரின் மூத்த மகன் சுரேஷ்குமார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.