பாளையங்கோட்டையில் பயிற்சி மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம்
பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் நியமிக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடிக்கிறது.
தங்களது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், இதர கல்லூரி மாணவர்களிடமும் பயிற்சி மருத்துவர்கள் ஆதரவு திரட்டி வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.