புவனகிரி காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு திடீர் மாற்றம்!
புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றுபவர் ஸ்ரீதரன். இவர் சமீபத்தில் வேப்பூர் காவல் நிலையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதரன் திடீரென கடலூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றுபவர் ஸ்ரீதரன். இவர் சமீபத்தில் வேப்பூர் காவல் நிலையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் இவர் மீது பல்வேறு புகார்கள் விழுப்புரம் சரக டிஐஜிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சனிக்கிழமை இரவு திடீரென கடலூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.