சிதம்பரம் மதுபானக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை!
சிதம்பரம் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் காலவதியான மதுப்பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், மதுஅருந்து இடத்தில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு
சிதம்பரம் டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் பார்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டார்.
சிதம்பரம் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் காலவதியான மதுப்பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், மதுஅருந்து இடத்தில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புதுறையினருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஹெச்.பி.ராஜா, கீரப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி அருண்மொழி ஆகியோர் சிதம்பரம் பஸ்நிலையம், எஸ்.பி.கோயில்தெரு, மாலைக்கட்டித்தெரு, லால்கான்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது போலியான மதுபாட்டில்கள், காலாவதியான மதுப்பாட்டில்கள் உள்ளதா என சோதனையிட்டனர். மேலும் பாட்டில்களை கூடுதல் விற்பனை செய்யக்கூடாது விற்பனையாளருக்கு அறிவுறுத்தினர். பின்னர் மதுஅருந்தும் கூடத்தில் இருந்த காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள், தரமாற்ற எண்ணைய், மற்றும் வீணாகிய முட்டைகள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்து, இதுபோன்ற சுகாதாரமற்ற உணவு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்திவிட்டு சென்றனர்.