முகப்பு
தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடச் சென்ற அதிகாரிகள் கேரள போலீஸாரால் கைது

முல்லை பெரியாறு அணையை கடந்த ஒரு வார காலமாகப் பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள போலீஸார் தடுத்து, அவர்கள் கையெழுத்திட்டுச் சென்றால்தான் அனுமதிப்போம் என்று கூறியதால்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

முல்லை பெரியாறு அணையை கடந்த ஒரு வார காலமாகப் பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள போலீஸார் தடுத்து, அவர்கள் கையெழுத்திட்டுச் சென்றால்தான் அனுமதிப்போம் என்று கூறியதால், அதிகாரிகள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்றும் அணையைப் பார்வையிடச் சென்ற அதிகாரிகளை கேரள போலீஸார் தடுத்து நிறுத்தி கையெழுத்திட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதனிடையே, தமிழக அதிகாரிகள் சென்ற படகில் இருந்து மது பாட்டில்கள் 5 கைப்பற்றப் பட்டதாகவும், அதனால் அவர்களைக் கைது செய்வதாகவும் கேரள போலீஸார் கூறி, அதிகாரிகளைக் கைது செய்தனர். ஆனால், தாங்கள் மது பாட்டில்கள் கொண்டு வரவே இல்லை என்று தமிழக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.