முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பள்ளி மாணவி மாயம்: போலீஸார் விசாரணை

விருதுநகர் அருகே பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற மாணவியை காணவில்லை என உறவினர்கள் போலீஸாரிடம் புகார் செய்தனர்.

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:24 AM

விருதுநகர் அருகே பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற மாணவியை காணவில்லை என உறவினர்கள் போலீஸாரிடம் புகார் செய்தனர்.

   விருதுநகர் அருகே குமாரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையாவின் மகள் மீனாட்சி(14). இவரது தாய், தந்தை இறந்ததை அடுத்து, அவரது சித்தப்பா மாரிமுத்து பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்த மாணவி விருதுநகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தும் வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். ஆனால், இரவு நீண்ட நேரம் வரையிலும் வீடு திரும்பவில்லையாம்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, உறவினர்கள் மற்றும் தோழி வீடுகளில் விசாரித்துள்ளார். இதில் எங்கும் வரவில்லை என்பது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பள்ளிக்குச் சென்ற மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.