தென்காசி மக்களவைத் தொகுதி: 18 வேட்புமனுக்கள் ஏற்பு
தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி உள்பட 18 பேர் வேட்புமனுக்கள் ஏற்பட்டதாக
தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி உள்பட 18 பேர் வேட்புமனுக்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாற்று வேட்பாளர்களின் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தென்காசி மக்களவைத் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வசந்திமுருகேசன், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் க. கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் கே. ஜெயக்குமார், தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக சார்பில் டாக்டர் சதன்திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லிங்கம் மற்றும் சுயேட்சைகள் உள்பட 22 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர்.
திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசீலனையில் தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஷ்வரி முன்னிலையில் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். பரிசீலனையில் பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. அதிமுகவின் மாற்று வேட்பாளர் மு. பரமசிவன், காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளர் மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று வேட்பாளர் பொன்னுபாண்டி ஆகிய மூவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் சங்கீதா தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து 18 மனுக்கள் ஏற்கபட்டதாக அறிவிக்கப்பட்டது.