சிதம்பரம் அருகே ரூ.5 லட்சம் பறிமுதல்!
புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழு தலைவர் சிவா தலைமையான அலுவலர்கள் கீரப்பாளையம்- சிதம்பரம் சாலையில் மீன்லாரி ஒன்றை மறித்து
சிதம்பரம் அருகே மீன்ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.
புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழு தலைவர் சிவா தலைமையான அலுவலர்கள் கீரப்பாளையம்- சிதம்பரம் சாலையில் மீன்லாரி ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அப்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் டிரைவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்து 709 தொகையை தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.