முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றியப்பகுதியில் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து அதிமுகவினர் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:01 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றியப்பகுதியில் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து அதிமுகவினர் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நான்முனிசிபல் ஊராட்சியில் உள்ள நந்தனார் மடத்திலிருந்து வாக்கு சேகரிக்கு பணியை தொடங்கி, பொன்னாங்கன்னிமேடு, அம்மன்கோயில் காலனி, சிவசக்திநகர், எஸ்.ஆர்.நகர், வி.எஸ்.ஆர்.நகர், சி.பரமேஸ்வரநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். முன்னாள் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, குமராட்சி ஒன்றியச் செயலாளர் கே.ஏ.பாண்டியன், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் பாச.மில்லர், முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வைத்தியநாதசாமி, மோகனரங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக சென்று அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசிக்கு வாக்கு சேகரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments