சிதம்பரம் அருகே காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.2.52 லட்சம் பணம் பறிமுதல்
சிதம்பரம் அருகே காங்கிரஸ் பிரமுகரிடம் போதிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.52 லட்சம் பணத்தை தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் அருகே காங்கிரஸ் பிரமுகரிடம் போதிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.52 லட்சம் பணத்தை தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தோட்டக்கலை அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக் குழுவினர் புவனகிரி - குறிஞ்சிப்பாடி சாலையில் சொக்கங்கொல்லை எனுமிடத்தில் புதன்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புவனகிரியிலிருந்து நெய்வேலி நோக்கி சென்ற இன்னோவா காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் பயணம் செய்த கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணனிடம் போதிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் தொகையை பறிமுதல் செய்தனர். தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்த பணத்தை சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயாவிடம் ஒப்படைத்தனர்.
Advertisement