சுகாதாரமான குடிநீர் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகராட்சி 3-வது வார்டில் முத்துமாணிக்கநாடார் தெரு, நந்தவனம் பகுதியில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் வழங்கப்படுவதை கண்டித்தும், சுகாதாராமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு கழிவுநீர் கலந்த குடிநீர் பாட்டிலுடன் அமர்ந்து 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.