முகப்பு
தற்போதைய செய்திகள்

சுகாதாரமான குடிநீர் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:01 AM
பகிர்:

சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சி 3-வது வார்டில் முத்துமாணிக்கநாடார் தெரு, நந்தவனம் பகுதியில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் வழங்கப்படுவதை கண்டித்தும், சுகாதாராமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு கழிவுநீர் கலந்த குடிநீர் பாட்டிலுடன் அமர்ந்து 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments