திருச்சி விமான நிலையத்தில் 400 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இதில் பயணம் செய்த நபரிடம் இருந்து 400 கிராம் கடத்தல் தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சூட்கேஸ் பெட்டியின்
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இதில் பயணம் செய்த நபரிடம் இருந்து 400 கிராம் கடத்தல் தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சூட்கேஸ் பெட்டியின் சக்கரத்தில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த துரையரசன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.