முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்த திமுக மாநில பொறியாளர் அணி செயலாளர்!

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் திமுக பொறியாளர் பிரிவு மாநில செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான துரை.கி.சரவணன் வாக்கு சேகரித்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:01 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் திமுக பொறியாளர் பிரிவு மாநில செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான துரை.கி.சரவணன் வாக்கு சேகரித்தார்.

திமுக மாநில பொறியாளர் அணி செயலாளரான துரை.கி.சரவணன், வியாழக்கிழமை  பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பி.முட்லூர், ஆதிவராகநல்லூர், தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, தம்பிக்குநல்லாம்பட்டினம், பூவாலை உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களில் கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளனை ஆதரித்து வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் ஒன்றியச் செயலாளர் அ.ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments