விருதுநகர் மக்களவை தொகுதியில் நாளை கனிமொழி பிரசாரம்
விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் ரத்தினவேலை ஆதரித்து எம்.பி.கனிமொழி வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரம் செய்கிறார்.
விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் ரத்தினவேலை ஆதரித்து எம்.பி.கனிமொழி வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரம் செய்கிறார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆகியோர் கிராமங்கள் தோறும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் எம்.பி.கனிமொழி பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் குறிப்பிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாலை 4 மணிக்கு சாத்தூரில் முக்ராந்தல், 5.30 மணி முதல் 6.30 மணி வரையில் சிவகாசியில் பைபாஸ் சாலை, டெக்ஸ்டைல்ஸ், பராசக்தி காலனி, இரவு 7 மணி முதல் 7.30 மணி வரையில் திருத்தங்கல் பள்ளப்பட்டி சாலை, சத்யா நகர், தேவர்சிலை ஆகிய பகுதியிலும், இரவு 8 மணிக்கு விருதுநகர் நகராட்சி சாலையிலும் பொதுமக்களிடையே பிரசாரம் செய்து வாக்குகள் சேகரிக்கிறார்.
Advertisement
இதற்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை தொகுதி தலைவருமான முத்தையா, மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.