வாக்கு சேகரித்த போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அருகே புவனகிரி ஒன்றியத்தில் வாக்கு
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் வாக்கு சேகரிக்கும் போது ஏராளமான குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அருகே புவனகிரி ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினர். அப்போது திருமாவளவன் கையில் பெற்றுக்கொண்டு,அக்குழந்தைகளுக்கு கபிலன், வெற்றிசெல்வன், யாழினி, அமுதினி, எழில்மதி என குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.