முகப்பு
தற்போதைய செய்திகள்

மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

இது தொடர்பாக ஆர்.வராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: குஜராத் மாநில முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 இது தொடர்பாக ஆர்.வராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: குஜராத் மாநில முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயர் ஜúஸôதாபென் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால், குஜராத் சட்டசபைத் தேர்தலில் கடந்த 2002, 2007 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் போட்டியிடும் போது மனைவி என்ற பகுதியை வெற்றிடமாக விட்டிருந்தார்.

 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்த தேர்தல் வேட்பு மனுவில் அது போன்ற எந்தத் தகவலையும் மோடி வெளிப்படுத்தவில்லை.

 மேலும், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், அவரது மனைவி ஜúஸôதாபென்னின் வருமானம் குறித்து எந்தத் தகவல்களையும் குறிப்பிடவில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றமாகும்.

 எனவே, தவறாக வேட்புமனுத் தாக்கல் செய்த நரேந்திர மோடிக்கு எதிராக, குற்றவியல் நடவடிக்கை உள்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

 இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (ஏப்.22) விசாரணைக்கு வந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்த அடுத்த நாளே மனுதாரர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  இதைப் பார்க்கும் போது, இந்த மனுவை ஊக்குவிப்பதற்கான எந்த காரணமும் நாங்கள் கண்டறியவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →