புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனம் சார்பில் அரசுக்கு ரூ.1.7 கோடி பங்குத் தொகை வழங்கல்
புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனம் சார்பில் மாநில அரசுக்கு பங்கு ஈவுத் தொகையாக ரூ.1.7 கோடியை அதன் தலைவர் வி.எம்.சி. சிவக்குமார் எம்.எல்.ஏ., முதல்வர் என்.ரங்கசாமியிடம் வழங்கினார்.
புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனம் சார்பில் மாநில அரசுக்கு பங்கு ஈவுத் தொகையாக ரூ.1.7 கோடியை அதன் தலைவர் வி.எம்.சி. சிவக்குமார் எம்.எல்.ஏ., முதல்வர் என்.ரங்கசாமியிடம் வழங்கினார்.
வில்லியனூர் அடுத்த ஆரியப்பாளையத்தில் அரசு சாராய வடிசாலை இயங்கி வருகிறது. இந்த ஆலை சார்பில் கடந்த 2011-12-ல் 138 லட்சம் லிட்டர் மதுவை ரூ.30.3 கோடிக்கு விற்று அதில் நிகர லாபமாக ரூ.5.21 கோடியை ஈட்டியது. தொடர்ந்து 2012-13-ல் 148.5 லட்சம் லிட்டர் மதுவை ரூ.35.43 கோடிக்கு விற்று அதில் நிகர லாபமாக ரூ.4.81 கோடி ஈட்டியது.
இதையடுத்து அரசுக்கான பங்கு ஈவுத் தொகையாக 2011-12-ம் ஆண்டுக்கு ரூ.1.03 கோடியும். 2012-13 இடைக்கால பங்கு ஈவாக ரூ.60 லட்சமும் வடிசாலை நிறுவனம் வழங்குகிறது.
இத்தொகையை நிறுவனத்தின் தலைவர் விஎம்சி. சிவக்குமார் மாநில முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார். இயக்குநர் கே.கே.சிங், மேலாண் இயக்குநர் கே.குமாரகிருஷ்ணன், செயலர் எஸ்.குலோத்துங்கன், பொது மேலாளர் எஸ்.டென்சிங், மேலாளர் பி.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.