முகப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு நெல்லை வந்த மதுரை சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் கைது

திருநெல்வேலிக்கு ரயில் முலம் வந்த மதுரையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:06 AM
பகிர்:

திருநெல்வேலிக்கு ரயில் முலம் வந்த மதுரையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் வியாழக்கிழமை இரவு காவல் ஆய்வாளர் ரகுபதிராஜா, உதவி ஆய்வாளர் மெர்ஸி தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு இளைஞருடன் வந்த சிறுமி திடீரென சத்தம்போட்டதால் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அந்த 15 வயது சிறுமி, வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் மூலம் நெல்லைக்கு வந்து எங்கு செல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த திருநெல்வேலி சி.என்.கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெள்ளைத்துரை (18) அந்த சிறுமியை சிரீபுரம் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டராம்.

 பின்னர் சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தபோதுதான் போலீஸாரை கண்டு சிறுமி சத்தம் போட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வெள்ளைத்துரையை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அந்த சிறுமியை, திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →