முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) சார்பில், பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:32 AM
பகிர்:

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) சார்பில், பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரிய பிரிப்பு அமலாக்கத்தை கைவிட வேண்டும். மஸ்தூர்கள் அனைவரையும் களஉதவியாளராகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். பகுதிநேர ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும். புதிய பிரிவுகளுக்கு பகுதிநேர ஊழியர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.

விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். 2 ஆண்டுகள் பணிமுடித்த கள உதவியாளர்களுக்கு கம்பியாளர் பதவிஉயர்வு வழங்க வேண்டும். காற்றாலை பண்ணையில் பணிபுரியும் மஸ்தூர்களுக்கு களஉதவியாளர் பதவிஉயர்வு வழங்க வேண்டும். மின்இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.பூலுடையார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ.  மாவட்டச் செயலர் ஆர்.மோகன் தொடக்கவுரையாற்றினார். திட்டத் துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், திட்டப் பொருளாளர் டி.வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

திட்டச் செயலர் எம்.பீர்முகம்மது ஷா, திட்ட துணைத் தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி, மண்டலச் செயலர் எஸ்.வண்ணமுத்து ஆகியோர் பேசினர். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →