பரம்பிக் குளம் அணையில் நீர் திறப்பு : சர்க்கார் பதியில் மின் உற்பத்தி துவக்கம்
கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கார் பதியில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.
கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கார் பதியில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.
காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு பரம்பிக் குளம் அணையில் இருந்து வினாடிக்கு 550 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்க்கார் பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 12 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.