முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பில் விவசாயக் கண்காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயக் கண்காட்சியை நடத்தினர். இக் கண்காட்சியை ஏராளமான விவசாயிகள், மாணவர்கள் கண்டு பயனடைந்தனர்.

தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பில் விவசாயக் கண்காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயக் கண்காட்சியை நடத்தினர். இக் கண்காட்சியை ஏராளமான விவசாயிகள், மாணவர்கள் கண்டு பயனடைந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயக் கண்காட்சியை நடத்தினர். இக் கண்காட்சியை ஏராளமான விவசாயிகள், மாணவர்கள் கண்டு பயனடைந்தனர்.

கண்காட்சியை வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலுச்சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் மாணவிகள் ஒருங்கிணைந்த பண்ணையம், திருந்திய நெல் சாகுபடி, சூரிய ஒளி மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், தென்னையில் சொட்டு நீர், பட்டுப்புழு வளர்க்கும் முறை, திரவ நுண்ணுயிர் உரம் பயன்படுத்தும் முறை, உவர் நிலத்தை மேம்படுத்துதல், பாலி மல்சிங், இயற்கை வேளாண்மை, மஞ்சள் ஒட்டுப்பொறி பயன்படுத்தும் முறை உள்ளிட்ட விவசாய தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தும் வகையில் மாதிரிகளை செய்திருந்தனர்.

மேலும் மண் மாதிரி எடுக்கும் முறை, விதை நேர்த்தி, அசோலா தயாரிக்கும் முறை, தென்னை டானிக், தென்னை மற்றும் வாழையில் அடர் நடவு, மஞ்சணத்தி மற்றும் பார்த்தீனியம் அழிக்கும் முறை, குழித்தட்டில் காய்கறிகளை சாகுபடி செய்யும் முறை உள்ளிட்டவற்றை வரைபடமாக வரைந்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.

பருத்தியில் கூண்வண்டு தாக்குதல், தென்னையில் காண்டாமிருக வண்டு, நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தத மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
கண்காட்சியை 215 விவசாயிகள் மற்றும் இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரங்காராவ் லயன்ஸ் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ மாணவியர், பொதுமக்கள் கண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாணவிகள் ஷீனா ஐசக், அபிராமி, மணிமேகலை, இந்துமதி, பிரியங்கா, வளர்மதி, விமல்ராணி, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →