விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரையில் அட்வகேட் மற்றும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்து செவ்வாய்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட தலைநகரில் அரசு உத்தரவிட்டப்படி மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும். விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமித்து, கூடுதலாக அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தைச் சேர்ந்த 110 பேரும், வழக்குரைஞர் சங்கத்தினர் 60 பேரும் என இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், நீதிமன்றங்களில் வாதி, பிரதிவாதி சாட்சியங்கள் விசாரணை செய்ய முடியாமலும், சிறைச்சாலையில் இருக்கும் விசாரணை கைதிகளை போலீஸார் அழைத்து வரமுடியாத நிலையில் உள்ளேயே இருக்கும் நிலைமை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்புராம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.