பெயரளவிற்கு விடப்படும் மீன்குஞ்சுகள்: மீனவர்கள் வேதனை
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் ஆண்டு தோறும் மீன்வளத் துறையினர் 6 தவணைகளாக மீன் குஞ்சுகளை விடுவதாக தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் ஆண்டு தோறும் மீன்வளத் துறையினர் 6 தவணைகளாக மீன் குஞ்சுகளை விடுவதாக தெரிவிக்கின்றனர். அமைச்சர் தொடங்கி வைக்கப்படும் நாள் அன்று முதல் தவணையாக மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன. அதன் பிறகு மீன்குஞ்சுகள் விடப்படுவதில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு 12.15 லட்சம் மீன்குஞ்சுகள் விடுவதாக இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால் சுமார் சுமார் 3 லட்சம் மீன்குஞ்சுகளுக்கு மேல் ஏரியில் விடுவதில்லை. இதனால் மீன் ஆதாரம் இல்லாமல் உள்நாட்டு மீனவர்கள் அவதியுற்று வருகிறோம் என உள்நாட்டு மீனவர்கள் தெரிவித்தனர்.