லாரி ஏறியதில் தூங்கிக் கொண்டிருந்தவர் உடல் நசுங்கி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் முனியாண்டி (45). சலவைத் தொழிலாளியான இவர், இங்குள்ள தனியார் நூற்பு ஆலை அருகே தூங்கிக்
தற்போதைய செய்திகள்லாரி ஏறியதில் தூங்கிக் கொண்டிருந்தவர் உடல் நசுங்கி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் முனியாண்டி (45). சலவைத் தொழிலாளியான இவர், இங்குள்ள தனியார் நூற்பு ஆலை அருகே தூங்கிக்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தூங்கிக் கொண்டிருந்தவர் மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் முனியாண்டி (45). சலவைத் தொழிலாளியான இவர், இங்குள்ள தனியார் நூற்பு ஆலை அருகே தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது லோடு ஏற்றிய லாரி நூற்பு ஆலைக்கு வந்துள்ளது. டிரைவர் திருச்சி, துறையூர், ரெங்கநாதசுபரம் ஜெ.தாமோதரன் (43) லாரியை பின்னால் எடுத்துள்ளார். அப்போது படுத்து தூங்கிக் கொண்டிருந்த முனியாண்டி மீது லாரி ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கு.மாரியப்பன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் தாமோதரனைக் கைது செய்தனர்.