தற்போதைய செய்திகள்

வங்கி கணக்கு இல்லாத குடும்பத்தினர் உடனே தொடங்க வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கி கணக்கு திட்டத்தில் இதுவரையில் தொடங்காதவர்கள் கணக்கு தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் க.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கி கணக்கு திட்டத்தில் இதுவரையில் தொடங்காதவர்கள் கணக்கு தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் க.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பாரத பிரதமர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் வங்கிக் கிளைகள் அனைத்தும் கடந்த ஆக.16ம் தேதி முதல் வங்கி கணக்குகள் இல்லாதவர்களுக்கு தொடங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த விவகார எல்லைக்கு உள்பட்ட வங்கிகளின்  கணக்கெடுப்பின் படி அனைத்து குடும்பத்தினரும் கணக்கு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இம்மாவட்ட வங்கி கலந்தாய்வுக்குழுவும் வருகிற 24-ம் தேதி 100 சதவீதம் இலக்கை அடைந்து விட்டதாக அறிவிக்கவும் முடிவு செய்துள்ளது. எனவே இதுவரையில் தொடங்காதவர்கள் உடனே மேற்குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாகவே வங்கி கிளை அலுவலர்களை அணுகி கணக்குகளை தொடங்கும் படி அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

SCROLL FOR NEXT