வரதட்சணை கொடுமை : மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை
வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு விஜயலட்சுமி என்ற பெண்ணை, வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி, உயிரோடு எரித்துக் கொன்றதாக அவரது கணவர் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்த கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.