வல்லூர் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வல்லூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திங்கள்கிழமை வேலைக்கு செல்லாமல்
வல்லூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திங்கள்கிழமை வேலைக்கு செல்லாமல் தொழிலாளர்கள் ஆர்பாட்டம் செய்தனர். பொன்னேரி வட்டம் வல்லூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இதில் தகுதியுடைய நபர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் கழிப்படம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி தரக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் தலைவர் விஜயன் தலைமையில் அனல் மின் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.