காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: திருநெல்வேலியில் இந்து மக்கள் கட்சியினர் நூதன முறையில் போராட்டம்
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக எருமைமாடுகளுக்குதிருமணம் செய்து வைத்து நூதன முறையில் போராடினர்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக எருமைமாடுகளுக்குதிருமணம் செய்து வைத்து நூதன முறையில் போராடினர்.
இன்று காலை ஆட்சியர் அலுவலகம் முன் கூடிய இந்துமக்கள் கட்சியினர் எருமைமாடுகளை மணப்பெண் மணமகன் போல் அலங்கரித்து தாலி கட்டி காதலர் தினத்துக்கான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் மணி மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட தலைவர் உடையார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.