ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒட்டுநர், கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள கடையில் வெள்ளிக்கிழமை காலை நிறுத்தி கடையில் டீ குடித்துவிட்டு லாரியை எடுத்துள்ளார்.
அப்போது பின்னால் கார் வருவதை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் திடீரென லாரியை சாலையின் மையப்பகுகிக்கு ஓட்டியுள்ளார். இதில் பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். காரில் பயணம் செய்தவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.