முகப்பு
தற்போதைய செய்திகள்

உறவினர் பெயரில் பாஸ்போர்ட் : சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனை செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

உறவினர் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூர் செல்ல முயன்றவர் ஞாயிற்றுக்கிழமை விமான நிலைய போலீசாரால் கைது செய்ப்பட்டார்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனை செய்தனர். சோதனையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த பொன்னாப்பூரைச் சேர்ந்த ரா. தனபால் (51), அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் பன்னீர்செல்வம் பெயரில் பாஸ்போர்ட் மற்றும் பயண அவணங்கள் எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து தனபாலை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.