முகப்பு
தற்போதைய செய்திகள்

கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை: இளம்பெண் தற்கொலை

கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் 19 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் 19 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரோஜா (19) என்ற அந்தப் பெண்ணுக்கு, கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தப்பள்ளியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் வீரபத்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த நிலையில், தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார்கள் என்ற வருத்தத்தில் இருந்த ரோஜா, திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் திருமணமாகி 6 மாதமே ஆனதால், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸர் விசாரணை மேற்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →