கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை: இளம்பெண் தற்கொலை
கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் 19 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் 19 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரோஜா (19) என்ற அந்தப் பெண்ணுக்கு, கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தப்பள்ளியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் வீரபத்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த நிலையில், தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார்கள் என்ற வருத்தத்தில் இருந்த ரோஜா, திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் திருமணமாகி 6 மாதமே ஆனதால், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸர் விசாரணை மேற்கொண்டனர்.