முகப்பு
தற்போதைய செய்திகள்

கூலித்தொழிலாளி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
செங்கோட்டை அருகே உள்ள வல்லம் இந்திரா காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேஷ் (27). கூலித்தொழிலாளி. அதே ஊரின் கலைஞர் காலனியைச் சேர்ந்த முருகையா மகன் குமார் என்ற செந்தில்குமார் (28). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் உண்டாம்.
26-6-2009 அன்று இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதாம்.

இதில் ஆத்திரமடைந்த குமார், அரிவாளால் மகேஷை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ் இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு ஆயுள்சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில், மாவட்ட அரசு குற்றவியல் துறை வழக்குரைஞர் என்.சிவலிங்கமுத்து ஆஜரானார்.

முழு கட்டுரையைப் படிக்க →