திருவண்ணாமலையில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை
திருவண்ணாமலை புகழேந்தி 37 என்பவர் நேற்று இரவு தன் மனைவி பவானியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தூகிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை புகழேந்தி 37 என்பவர் நேற்று இரவு தன் மனைவி பவானியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தூகிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- திருவண்னாமலை காந்தி நகரை சேர்ந்த புகழேந்தி 37 என்பவர் சினிமா தியேட்டர் கேண்டியன் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பவானி 30 இவர்களுக்கு மகன் சஞ்சை 14 சவுமியா 12 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு குழந்தைகள் இருவரும் பாட்டி வீட்டுக்கு சென்றனர். இன்று காலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது அம்மா பவானி கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அப்பா புகழேந்தி பக்கத்து அறையில் தூக்கு மாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தது. திருவண்ணாமலை டவுண் டி.எஸ்பி சரவண குமார் தலைமயில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலகளை கைபற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்னெவென்று தெரியவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.