முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Updated On : 20 பிப்ரவரி, 2014 at 3:23 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:57 AM

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 24 பேர் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு முகாம் வெள்ளிக்கிழமை காலையில் கச்சேரி சாலையில் உள்ள கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

எனவே இக்கலந்தாய்வு முகாமில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு முன்னதாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.