இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்குவகிக்கும்: முதல்வர் ஜெயலலிதா
தொலைநோக்குத் திட்டத்தால் இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தொலைநோக்குத் திட்டத்தால் இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-பகுதி 2 வெளியிட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கொள்கையை வெளியிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா,தொலைநோக்குத் திட்டத்தால் இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றும் என்றார்.
மேலும நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் வளர்ச்சி 6.13 விழுக்காடாக இருக்கும். காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது .ஆட்டோமொபைல்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் துறையில் சென்னை உலக அளவில் சிறப்பு பெற்றுள்ளது என்றார்.