முகப்பு
தற்போதைய செய்திகள்

இத்தாலி வீரர்கள் விவகாரம்: மத்திய அரசு புது முடிவு

இந்திய மீனவர்களை கேரள எல்லையில் சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் சர்சைக்குரிய கடற்கொள்ளை தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

இந்திய மீனவர்களை கேரள எல்லையில் சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் சர்சைக்குரிய கடற்கொள்ளை தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

இதன்காரணமாக அவர்கள் மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். இந்நிலையில் மீனவர்களை கொன்ற வழக்கில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளதற்கு இத்தாலி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று கொச்சி கடலோர காவல் படை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர அந்தோணி, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் சமரசத்துக்கு இடமில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.