முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் 12 ஆயிரம் பேர் நாட்டியம் ஆடியுள்ளனர்: நாட்டியாஞ்சலி செயலர் தகவல்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 32 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டியக்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 32 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடியுள்ளனர் என நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தார்.

இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் அவர் பேசியது: டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் இந்த நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கப்பட்டது. தற்போது புதுதில்லி சங்கீதநாடக அகாதமி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பலரது உதவியோடு 32 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் 1600-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாட்டியம் ஆடியுள்ளனர்.

இந்த ஆண்டு நாட்டியாஞ்சலியில் 73 நாட்டிய நிகழ்வுகளில், 423 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியம் ஆடுகின்றனர் என வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.