பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அரசு ஊழியர் மீது வழக்கு
கரடிகுளத்தைச் சேர்ந்தவர் கருடபாண்டியன் மனைவி மாரியம்மாள்(30). கடந்த சில நாள்களாக இவரது கைபேசியில் மர்ம நபர் ஆபாசமாகப் பேசிவந்தாராம். இது குறித்த புகாரின் பேரில் கடையநல்லூர்
கடையநல்லூர் அருகே பெண்ணிடம் கைபேசியில் ஆபாசமாகப் பேசிய அரசு மருத்துவமனை ஊழியரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரடிகுளத்தைச் சேர்ந்தவர் கருடபாண்டியன் மனைவி மாரியம்மாள்(30). கடந்த சில நாள்களாக இவரது கைபேசியில் மர்ம நபர் ஆபாசமாகப் பேசிவந்தாராம். இது குறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸôர் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆபாசமாகப் பேசியவர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மசூது என்பது தெரியவந்தது.
மாரியம்மாளின் கணவர் கருடபாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாராம். அப்போது மாரியம்மாளின் கைபேசி எண்ணைப் பெற்ற மசூது ஆபாசமாக பேசியது தெரியவந்தது. கடையநல்லூர் போலீஸார் மசூதுவை தேடிவருகின்றனர்.