முகப்பு
தற்போதைய செய்திகள்

சதுர்வேதி மங்கலம் பெருமாள் கோயிலில் திருப்பாவை சொற்பொழிவு!

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குப்பங்குழி (சதுர்வேதிமங்கலம்) ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் கோயிலில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குப்பங்குழி (சதுர்வேதிமங்கலம்) ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் கோயிலில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான ஆழ்வார் திவ்விய பிரபந்த திட்டத்தின் கீழ் திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. விரிவுரையாளர் எஸ்.என்.தோதத்தாத்திரி வருகிற ஜன.14-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை திருப்பாவை குறித்து சொற்பொழிவாற்றுகிறார். திரளான மக்கள் பங்கேற்று சொற்பொழிவை கேட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவல் எஸ்.ஸ்ரீனிவாச நாராயணன் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.