முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி துறைமுகதத்தில் 3-ம் எண் புயல் கூண்டு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. இதனால்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு லேசான தூறல் இருந்தது. கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு புயல் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழணை 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.