முகப்பு
தற்போதைய செய்திகள்

என் மனைவி உட்பட எந்த பெண்ணையும் மது அருந்துமாறு வற்புறுத்தியது கிடையாது: கங்குலி

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து மேற்குவங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இரூந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி பதவிவிலகினார். இது குறித்து அவர் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து மேற்குவங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இரூந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி பதவிவிலகினார். இது குறித்து அவர் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

என் மீது சுமத்தப்படும குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றது; மாநில மற்றும் மத்திய அரசுகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன; தேவையில்லாமல் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளேன்,

எனக்குஎதிர்ப்புக்கள் அதிகரித்ததால் நான் பதவி விலகினேன்; என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒருதலைபட்சமானது;  நான் என் மனைவி உட்பட எந்த பெண்ணையும் மது அருந்த வற்புறுத்தியது கிடையாது. இந்நிலையில் மது அருந்துமாறு நான் எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும். நான் அப்பெண்ணை என்னுடன் தங்க வற்புறுத்தவில்லை; அவள் ஏற்கனவே ஹோட்டலில் தான் தங்கி இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.