முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலூரில் ஜவுளிகடை குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

மதுரை மாவட்டம் மேலூர் தெக்கடி பஜாரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஜவுளிக்கடையின் கிடங்கு திருவாதவூர் ரோட்டில் உள்ளது இன்று காலை அந்த கிடங்கில் திடீர் என தீ பிடித்துள்ளது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

மதுரை மாவட்டம் மேலூர் தெக்கடி பஜாரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஜவுளிக்கடையின் கிடங்கு திருவாதவூர் ரோட்டில் உள்ளது இன்று காலை அந்த கிடங்கில் திடீர் என தீ பிடித்துள்ளது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த மேலூர் தீ அணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த விபத்து குறித்து கடை உரிமையாளர் கூறும் போது  இது விபத்து அல்ல குடோனின் ஷட்டர் அடியில் மண்ணெணை ஊற்றி  தீ வைத்துள்ளனர்.

தொழில் போட்டி முன்விரோதம் காரணமாக இது யாரோ செய்த சதி வேலை என்று தெரிவித்தார். இதனால் பல லட்சம் மதிப்புள்ள ஜவுளி பண்டல்கள் நாசம் அடைந்துள்ளன. இதுகுறித்து மேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாராணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →